Wednesday, September 06, 2006

அதிசயமான ஒற்றுமை!

இந்தியப் பிரதமர் நேருஜிக்கு ஜப்பான் நாட்டுக் குழந்தைகள் யானை அனுப்ப வேண்டுமென்று அன்புடன் கடிதம் எழுதினார்கள்.

குழந்தை உள்ளம் படைத்த நேருஜி, உடனே அழகான யானைக் குட்டி ஒன்றை ‘இந்திரா’ என்று பெயரிட்டு, 1950-இல் அனுப்பினார். இந்த யானையை சில ஆண்டுகள் கழித்து ஜப்பான் நாட்டுக்குச் சென்ற போது நேருஜி கண்டு மகிழ்ந்தார்.

ஆனால் இந்திரா என்ற பெயர் கொண்ட அந்த யானை, அன்னை இந்திராகாந்தி நாட்டு துரோகிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில், அதே 31-10-1984 காலை ஜப்பானில் விலங்குச் சாலையில் திடீரைன்று இறந்து விட்டதாம்!

எப்படிப்பட்ட அபூர்வ ஒற்றுமை!

1 comment:

Santhosh said...

ரொம்ப ஆச்சரியமான உண்மை இது..